கடவுள்
கவியரசன் கண்ணதாசன் சொன்னது.
ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
அங்கே தேனை வைத்ததைத் தேனீக்கும் சொல்வான்.
பின்னர் அந்தத் தேன் இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
அவன் தான் கடவுள்🙏🏽
கேட்கும் திறனைக் கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களைப் பூனைக்கும் வைப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
ஓடும் திறனைக் கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
பின்னர் அந்த மானைப் பிடிக்கின்ற சக்தியைப் 🐅 புலிக்கும் கொடுப்பான்.
அவன்தான் கடவுள்🙏🏽
அற்புதமாய் சிந்திக்கின்ற ஆற்றலையும் கொடுப்பான்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.
அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
அவன்தான் கடவுள்🙏🏽
புரியாதவனுக்குப் புதிராய் இருப்பான்.
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
அவன் தான் கடவுள்🙏🏽
மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
பின்னிருந்து இயக்குவான்.
அவன் தான் கடவுள்🙏🏽
தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.
அவன் தான் கடவுள்🙏🙏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.