Expand The Future வருங்காலத்தை விரிவாக்கு

Sunday, 9 July 2023

 

கடவுள்  

கவியரசன் கண்ணதாசன் சொன்னது


ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 

மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽


பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான்.

பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽

     

பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.

அங்கே தேனை வைத்ததைத் தேனீக்கும் சொல்வான்.

பின்னர் அந்தத் தேன் இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.

அவன் தான் கடவுள்🙏🏽

    

கேட்கும் திறனைக் கூர்மையாக எலிக்கும் வைப்பான். 

அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களைப் பூனைக்கும் வைப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽

    

ஓடும் திறனைக் கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். 

பின்னர் அந்த மானைப் பிடிக்கின்ற சக்தியைப் 🐅 புலிக்கும் கொடுப்பான்.

அவன்தான் கடவுள்🙏🏽

    

அற்புதமாய் சிந்திக்கின்ற ஆற்றலையும் கொடுப்பான்.

அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽


தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 

அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். 

அவன்தான் கடவுள்🙏🏽

    ‌ 

புரியாதவனுக்குப் புதிராய் இருப்பான். 

தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽


கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 

தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். 

அவன் தான் கடவுள்🙏🏽

      

மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 

சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். 

பின்னிருந்து இயக்குவான். 

அவன் தான் கடவுள்🙏🏽

     

தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.

(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். 

அவன் தான் கடவுள்🙏🙏


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

KARNIVAL BAHASA TAMIL SEKOLAH RENDAH DAN SEKOLAH MENENGAH PERINGKAT NEGERI KEDAH TAHUN 2025 PADA 13/07/2025 (AHAD) DI SJK(T) TAMAN KELADI DA...